search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private mill fire"

    வெள்ளகோவில் செம்மாண்ட பாளையம் ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று இரவு 10 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் செம்மாண்ட பாளையம் ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று இரவு 10 மணியளவில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ மளமளவென்று பரவியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெள்ள கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மில்லில் இருந்த பஞ்சுகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×