search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ponneri worker death"

    பொன்னேரியில் ஓட்டல் ஊழியர் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பூந்தமல்லியை சேர்ந்தவர் முத்து (45). ஓட்டல் ஊழியர். இவர் பொன்னேரியில் உள்ள தனது அண்ணனை பார்க்க சென்றார். பொன்னேரி வரும்போது இங்குள்ள மூகாம்பிகை நகர் குட்டையில் மீன் பிடிப்பது முத்துவின் வழக்கம். இதற்காக வலையும் கொண்டு சென்றார்.

    நேற்று மாலை மூகாம்பிகை நகர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக முத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

    உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அவருடைய செருப்பும், உடைகளும் குட்டையின் அருகில் கிடந்தன. மீன்பிடிக்கும் வலையும் குட்டையில் விரிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, தீயணைப்பு படையினர் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் குட்டையில் தேடிய போது முத்து நீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டனர். சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்டையில் மூழ்கி உயிர் இழந்த ஓட்டல் ஊழியர் முத்துவுக்கு மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    ×