search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal sports"

    பொன்னேரி அருகே பொங்கல் விளையாட்டு விழாவில் தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண்கள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள மாலிவாக்கத்தில் நேற்று பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

    இந்த விளையாட்டு போட்டியில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு வந்திருந்த திருவொற்றியூரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பங்கேற்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அதே பகுதியை சேர்ந்தவர்கள் கண்டித்தனர்.

    இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த திருவொற்றியூரை சேர்ந்த வாலிபர்கள் உருட்டு கட்டையால் அப்பகுதி மக்களை தாக்கி தப்பி ஓடி விட்டனர்.

    இந்த தாக்குதலில் வள்ளி, சரண், விஜி, சுரேந்தர் உள்பட 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
    ×