search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Revenge Probe Underway"

    ஆந்திராவில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய பிரமுகர் கொல்லப்பட்ட சம்பவம் கர்னூல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TDPLeaderKilled
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கே.வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமேஷ்வர் கவுடா. ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் தேவனகொண்டா மண்டல துணைத்தலைவரான இவர் இன்று காலை மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

    அரசியல் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பட்டப்பகலில் தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டு தலைவர்களை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. #TDPLeaderKilled
    ×