என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police man daughter"
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் முத்துசாமி. போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பிரவீன்.
அதே குடியிருப்பில் போலீஸ் ஏட்டு ஒருவரும் வசித்து வருகிறார். அவரது மகள் பள்ளியில் படித்து வருகிறாள். இந்த சிறுமிக்கு பிரவீன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
சிறுமியை பிரவீன் அடுக்குமாடி குடியிருப்பின் மாடிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமிக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்து சிறுமி கூச்சல் போடவே குடியிருப்புவாசிகள் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து பிரவீன் தப்பி ஓடினார்.
இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் பிரவீனை கைது செய்தனர்.
சென்னை வில்லிவாக்கத்தில் சமீபத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவரம் பால் பண்ணை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தற்போது சப்-இன்ஸ் பெக்டர் ஒருவரின் மகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்