search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pilots plane disclaimer"

    பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்துவிடடனர். இதனால் 10 மணி நேரம் மதுரை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    மதுரை:

    சிங்கப்பூரில் இருந்து மதுரை வழியாக கொச்சி செல்லும் விமானம் இரவு 11 மணிக்கு வந்து பின்னர் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்லும். வழக்கம்போல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியான நேரத்துக்கு அதாவது 11 மணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    2½ மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. 11 மணியுடன் பணி நேரம் முடிந்ததால் மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர்.

    எனவே நள்ளிரவில் வந்த சிங்கப்பூர் விமானம் மீண்டும் கொச்சி புறப்பட்டு செல்லவில்லை. அந்த விமானத்தில் வந்த கொச்சி பயணிகள் 8 பேர் மதுரை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 10 மணி நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். #tamilnews

    ×