search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament Election Election"

    • பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் இன்று அதிகாலை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதனிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை கிண்டியைச் சேர்ந்த அணில் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து, வெள்ளி கொலுசு சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கூறுகையில், உரிய ஆவணங்கள் இருந்தும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறினர்.

    ×