search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "paper mill employee died"

    புன்னம்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காகித ஆலை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வேலாயுதம்பாளையம்:

    புன்னம் சத்திரம் நெடுஞ்சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பிச்சை (45). இவர் புகளுர் காகித ஆலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பணியினை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.  

    அப்போது வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் நோக்கி வந்த கார் பிச்சை மீது மோதியது. இதில் அவருக்கு தலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிச்சை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த விபத்து குறித்து வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல் வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×