search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "palani temple statue scam case"

    பழனி தண்டாயுதபாணி கோவில் சிலை முறைகேடு வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபாலுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    இந்து அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் தனபால். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்னை தேடி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட அவர், தனபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில் இந்த வழக்கில் குறற்றம் சாட்டப்பட்ட முதல் 2 பேருக்கு உரிய நிபந்தனையே இவருக்கும் பொருந்தும். மனுதாரர் தனது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும். கோர்ட்டின் அனுமதி இல்லாமல் போலீசார் அவரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக்கூடாது.

    மனுதாரர் கும்பகோணத்தில் 60 நாட்கள் போலீஸ் கண்காணிப்பில் தங்கியிருக்க வேண்டும். மனுதாரர் செல்போன், இணையதள சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    ×