search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palakkodu father murder"

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொம்மனூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. பெயிண்டர்.

    இவரது மனைவி கோகில வேணி. இவர்களுக்கு சூர்யா என்கிற சுரேந்திரன் என்ற மகனும், அம்மு, விமலா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    இதில் மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கோவிந்தசாமி தனது மகன் சூர்யாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோகிலவேணி இறந்து விட்டார். தனது மனைவியை இழந்து கோவிந்தசாமி தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதால் தினமும் மதுபோதையில் குடித்துவிட்டு அடிக்கடி தன்னுடைய மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இதையடுத்து நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது மகன் சூர்யாவிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர் தனது தந்தையை அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மூர்க்கத்தனமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரச மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தந்தையை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது மகன் சூர்யா என்கிற சுரேந்திரனை மகேந்திரமங்கலம் போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×