search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty mountain train"

    பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள 6-ம் வகுப்பு 2ம் பருவ சமச்சீர் ஆங்கில பாட புத்தகத்தில் ‘ட்ரீப் டூ ஊட்டி’ என்ற தலைப்பில் நீலகிரி மலை ரெயில் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. #OotyTrain
    கோவை:

    காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை சார்பில் 2-ம் பருவ சமச்சீர் பாட புத்தகம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. புதிதாக வழங்கப்பட்ட 6-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் ட்ரீப் டூ ஊட்டி என்ற தலைப்பில் நீலகிரி மலை ரெயில் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.

    புத்தகத்தில் மாணவ-மாணவிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்று வந்தது போன்றும், தங்கள் பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது போன்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

    வான் உயர்ந்த மலை, அடர்ந்த வனம், பரந்து விரிந்த தேயிலை தோட்டத்தின் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஊர்ந்து செல்லும் மலை ரெயிலில் பயணிப்பது, பிரமிக்க வைத்தது. இடையில் தாய் மற்றும் குட்டி யானை தண்டவாளத்தை வழி மறித்து நின்றது.

    இதனால் 30 நிமிடங்கள் பயண நேரத்தில் தாமதம் ஏற்பட்டது என மலை ரெயில் பயணத்தின் போது மாணவர்கள் தங்களது பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்தில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே நீலகிரி மலை ரெயில் ஊர்ந்து செல்வது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த பாடம் குழந்தைகளை சந்தோ‌ஷப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மலை ரெயில் மற்றும் ஊட்டி அங்கு வசிக்கும் பழங்குடியினர் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. #OotyTrain

    கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டதையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பழமை வாய்ந்த யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் ஊட்டிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.10 மணிக்கு மலைரெயில் 150 பயணிகளுடன் புறப்பட்டது.

    இதனிடையே கல்லாறு-அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 இடங்களில் தண்டவாளத்தில் மண்சரிவும், அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஒரு இடத்திலும் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத மற்றும் பெரிய கற்கள் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து கல்லாறு அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மின்னல் வேகத்தில் ஈடுபட்டனர். மேற்கண்ட 3 இடங்களிலும் தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறையை அகற்றினர்.

    நடுவழியில் சுமார் 2.15 நிமிடம் மலை ரெயில் நின்றதால் பயணிகள் அவதியடைந்தனர். தண்டவாளம் முழுவதும் சீரமைக்கப்பட்டு 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டுச்சென்றது. இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

    ஊட்டி மலையில் ரெயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. #OotyTrain
    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றது. பழமை வாய்ந்த மலை ரெயிலை யுனஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

    இதனையொட்டி சேலம் கோட்ட ரெயில்வேத்துறை சார்பில் சுற்றுலா திரு விழாவை யொட்டி உலக பாரம்பரிய தினம் மேட்டுப்பாளையம்- குன்னூர்- ஊட்டி ரெயில் நிலையங்களில் கடந்த 16-ந் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இதற்காக மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு நேரத்தில் ஜொலிக்கிறது.

    இந்நிலையில் குன்னூர்- ஊட்டி இடையே 2-ம் வகுப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை ரெயில்வே அதிகாரிகள் இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே பயணிக்க ஒரு நபர் ஒன்றுக்கு ரூ.15-ம், ஊட்டி- குன்னூர் இடையே பயணிக்க ரூ.10-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

    உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த மாதம் அக்டோபர் 8-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #OotyTrain

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயிலில் வெளிநாட்டு தம்பதியர் தேனிலவு பயணம் மேற்கொண்டனர். 153 பயணிகள் செல்லும் ரெயிலில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருவர் மட்டுமே சென்றனர்.
    மேட்டுப்பாளையம் :

    புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு என்றால் ஊட்டி, கொடைக்கானல் கொள்ளை விருப்பமாக அமையும். கொஞ்சம் வசதிபடைத்தவர்களாக இருந்தால் தேனிலவுக்கு குறிப்பிட்ட வெளிநாட்டு பயணத்துக்கு செல்ல விரும்புவார்கள். இந்த வகையில், இளம்தம்பதியருக்கு தேனிலவுக்காக செல்லும் ஆசை என்பது சிறகடித்துக்கொண்டே இருக்கும். இதனால் புதுமண தம்பதிகள், திருமணம் முடிந்த கையோடு எங்காவது நடையை கட்ட தொடங்கி விடுவார்கள். ஆனால் வெளிநாட்டை சேர்ந்த தம்பதியருக்கு ஊட்டி மலை ரெயிலில் தேனிலவு செல்ல ஆசை ஏற்பட்டது. அது பற்றி பார்க்கலாம்:-

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைரெயில் புறப்பட்டு பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதன்பின்னர் மீண்டும் அங்கிருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. மலைரெயிலில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில்காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலைரெயிலை யுனஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இந்த நிலையில் ஊட்டி மலை ரெயிலின் சிறப்புகள் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரகாம் வில்லியம் லைன் (வயது30) என்பவர் கேள்விப்பட்டார். இவர் அங்குள்ள என்.எச்.எஸ். மருத்துவமனையில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சில்வியா பியோசிக் (27). இவர் பல்வேறு நாடுகளில் உள்ள சிறப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் ஊட்டி மலைரெயிலில், தேனிலவு பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து மகிழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

    கிரகாம் வில்லியம்லைன்-சில்வியாபியோசிக் தம்பதியர் மலைரெயில் என்ஜினை ஆர்வத்துடன் பார்த்ததை படத்தில் காணலாம்.


    இதைத்தொடர்ந்து சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு கிரகாம்வில்லியம் லைன் சம்பந்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. (இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்) ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 321-ஐ கட்டணமாக செலுத்தினார். இதையடுத்து ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு மலை ரெயிலை கணவன்-மனைவிக்காக நேற்று காலை இயக்கியது. இதற்காக கிரகாம் வில்லியம் லைன் தனது மனைவியுடன் சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலையில் மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். அவருடன் ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர் சசிதர் வழிகாட்டியாக வந்திருந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு செல்லும் மலைரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பிறகு சிறப்பு மலைரெயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் வந்த தேனிலவு தம்பதி இருவரும் ஊட்டி மலை ரெயிலை வியப்புடன் கண்டு ரசித்தனர். அவர்களிடம், மலைரெயிலின் சிறப்புகள் குறித்து ரெயில் நிலைய மேலாளர்கள் வேதமாணிக்கம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதையடுத்து காலை 9.10 மணிக்கு 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட மலைரெயிலில் கணவன்-மனைவி இருவர் மட்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள், மலைப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளைக்கண்டு ரசித்த வண்ணம் மலைரெயிலில் பயணம் செய்தனர். இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். முன்னதாக அவர்கள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பெட்டிகள், என்ஜின் உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இந்த மலை ரெயிலில் 153 பயணிகள் பயணம் செய்யலாம். கட்டணமாக ரூ.7,500 மட்டுமே கிடைக்கும். ஆனால் கிரகாம்வில்லியம் லைன் மற்றும் அவரது மனைவி சில்வியா பியோசிக் ஆகியோர் பயணம் செய்ய ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த கூடுதல்கட்டணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘ஊட்டி மலை ரெயில் ஏற்கனவே நஷ்டத்தில் ஓடுகிறது. இருந்தாலும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த ரெயில் விடப்படுகிறது. அத்துடன் பயணிகளுக்கு மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிறப்பு ரெயில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நபருக்கு ரூ.1,100 கட்டணமாக வசூலிக்கப்படும். அத்துடன் தேனிலவு தம்பதியினர் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் பதிவு செய்து உள்ளனர். அவர்களும் தனியாக கட்டணம் எடுத்து இருப்பதால்தான் கட்டண தொகை அதிகமாக இருக்கிறது’ என்றனர். 
    என்ஜினீல் ஏற்பட்ட பழுது காரணமாக ஊட்டி மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் சூழ்ந்து வன பகுதி வழியாக இந்த ரெயில் இயக்கப்படுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு களித்து வருகிறார்கள்.

    இந்த ரெயில் தினமும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளைத்தில் இருந்து புறப்படும். அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு மலை ரெயில் என்ஜினை இயக்க முயன்றனர்.

    அப்போது இயங்கவில்லை. அதன் ஜெனரேட்டரில் பழுது ஏற்பட்டது தெரிய வந்தது. ரெயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு என்ஜினீல் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது.

    இந்த பணி காலை 8 மணிக்கு முடிவடைந்தது. அதன் பின்னர் ரெயில் பெட்டிகளுடன் என்ஜின் இணைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 8.20 மணிக்கு மலை ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. ஒரு மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டது.

    இதில் 200 பயணிகள் பயணம் செய்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.

    ×