என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Nellaiappar temple Pavitra Utsavam"
- கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது.
- விநாயகர், முருகன், உற்சவ சுவாமி, அம்பாள், சண்டிகேஸ் வரருக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
நெல்லை:
கோவில்களில் செய்யப்படும் பூஜைகளில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நீக்கி ஓராண்டு நடந்த பூஜைகளை சம்பூர்ணமான பலன் கிடைத்து உலக மக்கள் நன்மை வேண்டி பவித்ர உற்சவம் நடத்தப்படுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு பவித்ர உற்சவம் நடக்கிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு மூல மகாலிங்கம், நெல்லையப்பர்- காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரமான பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், முருகன், உற்சவ சுவாமி, அம்பாள், சண்டிகேஸ் வரருக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
உற்சவருக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப் பட்டு வழிபாடுகளும், பின்னர் உச்சிகால பூஜைகளும் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரட்சை தீபாராதனைகள், அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுரு வாகனத்திலும், சுப்பிரமணியர் மர மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் பஞ்சமூர்த்திகளும் ரதவீதி நடக்கிறது. இரவு பள்ளியறை பூஜை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்