search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naxal arrest"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்து, தேடப்பட்டு வந்த நக்சலைட்டை போலீசார் இன்று கைது செய்தனர். #Naxal
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சலைட் டோர்னபால் பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி, மாநில போலீசாரும், சி.ஆர்.பி.எப். வீரர்களும் இணைந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Naxal
    ×