என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Muthumaalai Amman Temple"
- முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனி கொடை விழாவில் விநாயகர், முத்துமாலை அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டி மன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் தாமிரபரணி ஆற்றின் தென்கரை யில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 27-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.
கொடைவிழா
நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) காலையில் இருந்து அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். மதியம் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு பூஜைக்கு பின்பு நாராயண சுவாமி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனி கொடை விழாவில் விநாயகர், முத்துமாலை அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் தங்களது உடல் குறைபாடுகள் நீங்க கோவில் வளாகத்தில் தங்கி விரதமிருந்தும், அங்க பாகங்களை மரக்கட்டையில் செய்து நேர்த்தி கடன் செலுத்தியும், மாவிளக்கில் தீபம் ஏற்றி நோயால் பாதிக் கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.
இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பின்னர் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகள், தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் இரவு 2 மணியளவில் நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.
விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டி மன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் ஜெகதீசன், செல்வராஜ், முத்துமாலை, ராஜேந்திரன், சப்தசாகரன், குணசேகரன், சந்திரசேகரன், தங்கராஜ், சரவணன், கல்யாண சுந்தரம், விஜய், ஜெயராஜ், ரவி, சிவசுப்பிரமணியன், பெரியசாமி, ராகவன், கேசவமூர்த்தி, ஜெயசங்கர், ஜெகநாதன், ஜெயமுருகன், முத்து கிருஷ்ணன், ஈஸ்வரன், ராமஜெயம், ஜெகநாதன், ஜெயப்பிரகாஷ், செல்வ முத்துராமன், அர்ஜுன், பாலாஜி, கண்ணன், சதீஷ் குமார், பாலகிருஷ்ணன், முத்து லிங்கம், முத்துக்குமார், முத்துராஜா மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கார், வேன்களில் வந்திருந்து ஆனி கொடை விழாவில் கலந்து கொண்ட னர். தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவை குண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
விழா எற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ராம சுப்பிரமணியன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தி னர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தி னர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்