என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mother and child died"
கொழிஞ்சாம்பாறை:
பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருமாட்டியை சேர்ந்தவர் கிரிஷ்குமார் (வயது 30). இவரது மனைவி சினி (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 20-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. ஆனால் தாயும், குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது. திருச்சூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து ஆம்புலன்சில் இருவரையும் நேற்று அழைத்துச்சென்றனர். உறவினர்களில் சிலர் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மீனாட்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.
ஆம்புலன்சில் சென்றபோது தாயும், குழந்தையும் அடுத்தடுத்து இறந்தனர். மீனாட்சிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிகிச்சையில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்