search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ministry of Agriculture"

    • வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.
    • தஞ்சை காட்டு தோட்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்களில் ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும், தோட்டக்கலைத் துறைக்கு ஆட்சியாளர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை காட்டு தோட்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பலராமன் விளக்க உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றியனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ஹேமலதா நன்றி கூறினார்.

    ×