என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ministry of Agriculture"
- வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.
- தஞ்சை காட்டு தோட்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகங்களில் ஆட்சி அலுவலர் பணியிடம் அனுமதிக்க வேண்டும், தோட்டக்கலைத் துறைக்கு ஆட்சியாளர் பணியிடம் அனுமதிக்க வேண்டும்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு அமைச்சுப் பணியிடம் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை காட்டு தோட்டம் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பலராமன் விளக்க உரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றியனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் ஹேமலதா நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்