search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro rail stations"

    தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் கூடுதலாக ஒரு நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது.
    சென்னை:

    சென்னை சென்டிரல் - விமானநிலையம், விமானநிலையம் - ஏ.ஜி-டி.எம்.எஸ்., ஆலந்தூர்-பரங்கிமலை உள்ளிட்ட பாதைகளில் 26 மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்துவருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேர் இதில் பயணித்து வருகின்றனர்.

    அதிக பயணிகள் வரும் ரெயில் நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 3 நுழைவுவாயில்கள் செயல்பட்டு வருகிறது. இப்போது சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் புதிதாக 4-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது.

    அதேபோல் நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தது. தற்போது தேவர் சிலை பகுதியில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் 3-வது நுழைவுவாயில் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு 26 பயணிகள் செல்லும் வகையில் 2 லிப்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளன.

    தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஏற்கனவே 2 நுழைவுவாயில்கள் இருந்தன. தற்போது எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சிக்னல் அருகில் இருந்து வருபவர்களுக்காக 3-வது நுழைவுவாயில் நேற்று திறக்கப்பட்டது. இந்த நுழைவுவாயில்கள் மூலம் பயணிகள் எளிதாக மெட்ரோ ரெயில் நிலையத்தை அடையமுடியும்.

    இந்த தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். 
    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கிரிட்டா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
    சென்னை:

    சென்னை பெருநகரின் புகழை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் சென்னை வாரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், கிரிட்டா நிறுவனத்துடன் இணைந்து பாரம்பரிய விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை விளையாட்டு நடக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சி நந்தனம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், கட்டம் விளையாட்டு, நட்சத்திர விளையாட்டு, நாலு கட்ட தாயம், டயர் ஓட்டுவது ஆகிய பாரம்பரிய விளையாட்டுகள் நடந்தன. இதில் 75 பயணிகள் கலந்து கொண்டனர்.




    இன்று (செவ்வாய்கிழமை) கிண்டி, வடபழனி மற்றும் நங்கநல்லூர் ரோடு ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரையிலும், மற்ற அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை பாரம்பரிய விளையாட்டு நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் வினிதா சித்தார்த்தா ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×