என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mercenaries"
+2
- மாரிராஜூ என்பவருக்கும், புனித ஆனி எப்சிபாவிற்கும் நீண்டநாட்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது.
- இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 2 பேர் அழகு சுந்தரபாண்டியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி (வயது 32), விவசாயி. இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாய பணிகள் மேற்கொண்டு வருகிறார்.
அரிவாள் வெட்டு
கடந்த 8-ந்தேதி இரவு அழகு சுந்தரபாண்டி வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சல்லிசெட்டிபட்டி கிராமம் அருகில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து 2 மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த சுந்தரபாண்டி விளாத்திகுளம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டார்.
இது தொடர்பாக சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். சுந்தரபாண்டியும், வல்லநாடு பகுதியை சேர்ந்த புனித ஆனி எப்சிபா(29) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கள்ளக்காதல்
இதற்கிடையே மாரிராஜூ என்பவருக்கும், புனித ஆனி எப்சிபாவிற்கும் நீண்டநாட்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால், அவரை தீர்த்துக்கட்ட புனித ஆனி எப்சிபா தனது கள்ளக்காதலன் மாரிராஜ் (31) மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (20) ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். அதன்படி, மதுரையை சேர்ந்த கூலிப்படையினருக்கு ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பேசி, ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்து உள்ளனர். இதையடுத்து கூலிப்படையை சேர்ந்த 2 பேர் அழகு சுந்தரபாண்டியை வெட்டிக் கொலை செய்ய முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனிப்படை தீவிரம்
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புனித ஆனி எப்சிபா, மாரிராஜ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய கூலிப்படையை சேர்ந்த வர்களை கைது செய்ய விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் மதுரைக்கு சென்று கூலிப்படை யினர் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்