search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marina youth attack"

    மெரினாவில் ஜெர்மனி வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    சென்னை:

    ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் திஹாவ். 29 வயது வாலிபரான இவர் தனது மூக்குக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்துள்ளார்.

    திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ள திஹாவ் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்குவதற்காக சென்றிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் கண்ணகிசிலை பின்புறம் மணல் பரப்பில் அவர் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு வந்த 3 பேர் திஹாவின் செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். ஆனால் அவர் செல்போனை விடாமல் கையில் பிடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில் திஹாவின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.

    திஹாவ் சத்தம் போட்டார். இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. காயம் அடைந்த திஹாவ் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது.

    இதுபற்றி அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஜெர்மன் வாலிபரை தாக்கிய கொள்ளையர்கள் சதீஷ், ஷியாம், பிரசன்னா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொடுங்கையூரை சேர்ந்தவர்கள்.  #Robberycase

    ×