search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mairna"

    அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் கஸ்தூரி மெரினா அரசியல் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். #Kasthuri
    நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிராக விமர்சனங்களும் வந்த வண்ணமாக உள்ளன.

    இருப்பினும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொடந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் சாமி சிலைகள் கடத்தல் குறித்து பேசினார். சினிமாவில் பலர் சம்பளம் தராமல் தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார். இந்த நிலையில், தற்போது மெரினா அரசியல் குறித்து கடுமையாக சாடி இருக்கிறார். 

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகிலேயே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்குள்ள அண்ணா நினைவிடத்தின் பின்னால் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.



    மெரினாவில் சில தலைவர்கள் தியானம் செய்கிறார்கள். அரசியல் அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்கள். இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    “கலைஞர் மற்றும் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தை எல்லோரும் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு தகப்பன் சொத்துமாதிரி நினைத்து ஆளாளுக்கு அடித்துக் கொள்கிறார்கள். மெரினா என்பது தியானம் செய்வதற்கும், தர்மயுத்தம் நடத்துவதற்கும் அறிவிப்புகளை வெளிடுவதற்குமான இடமாக மாறி விட்டது.

    60 ஆண்டுகளாக சாதி பிரிவினைகள், லஞ்சம், ஊழல் மற்றும் வெறுப்பு அரசியல்தான் இருந்து இருக்கிறது. இதை அவர்களே ஒருவர்மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி சொல்லி வருகிறார்கள். இப்போது ஒரு மாற்றத்துக்கான நேரம் வந்து இருப்பதாக கருதுகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். #Kasthuri

    ×