search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai woman knife attack"

    மதுரை அருகே வீட்டில் கோழி புகுந்ததால் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பி.ஆலங்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ் குமார் மனைவி வனிதா (வயது 30). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அய்யாவு (55) குடும்பத்துக்கும் இடையே வீட்டுக்குள் கோழி புகுந்தது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் வனிதா சம்பவத்தன்று இரவு வீட்டில் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அய்யாவு, அவரது மனைவி தனம், மகன் ராஜா ஆகிய 3 பேரும் அங்கு வந்து வனிதாவை சரமாரியாக அடித்து உதைத்து அரிவா ளால் வெட்டினர்.

    இது தொடர்பாக வனிதா பெருங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகி றார்.

    இதேபோல் தனம் கொடுத்த புகாரின் பேரில் வனிதா, சுதா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குரங்குதோப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும் பத்துக்கும், பால்பாண்டி குடும்பத்துக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர் பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பால கிருஷ்ணன் நேற்று காலை வீட்டில் மனைவி தனலட்சுமி, மகள்கள் கோகிலா, நந்தினி (20) ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

    அப்போது பால்பாண்டி (36), மனைவி முத்துப் பாண்டி (30), மகன் பொன்பாண்டி மற்றும் உறவினர்கள் மீனாட்சி (48), அழகுராஜா (28), கரடிகண்ணன் (36), அழகு (30) ஆகிய 7 பேரும் வீடு புகுந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது தொடர்பாக நந்தினி வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் ரெஜினா வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×