search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai High Court Judge"

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#MaduraiHighCourt
    மதுரை:

    சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தை தூய்மையாக சுத்தமாக பராமரிக்கும் வகையிலும், பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றும் வகையிலும் இன்று சிறப்பு தூய்மைப்பணி முகாம் நடந்தது.

    இதில் மாநகராட்சியின் சார்பில் 75துப்புரவு பணியாளர்களும், 4 டிராக்டர்களும், 1 டம்பர் பிளேசரும், 8 டம்பர் பின்களும், 1 டிப்பர் லாரியும், 1 ஜே.சி.பி. எந்திரமும், 1 மினிரோபோவும், 1 புகை பரப்பும் ஆட்டோவும், 4 கை கொசு புகைபரப்பும் எந்திரமும் ஈடுபடுத்தப்பட்டது.

    மேலும் தூய்மைப்பணிக்கான தளவாட சாமான்கள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை வாளிகள் பயன்படுத்தப்பட்டது.

    6-வது பட்டாலியனை சார்ந்த 40 காவலர்களும், 40 ஊராட்சி பணியாளர்களும், 45 மத்திய தொழிற்சாலை பாதுகாப்புபடை வீரர்களும் நீதிமன்ற பணியாளர்களும் இந்த தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து எடுக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளையும், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாத துணிப்பைகளையும் நீதிபதிகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம் (நிர்வாகம்), பசீர்அகமது, சுந்தர், நிஷாபானு, கிருஷ்ணவள்ளி, சுரேஷ் குமார், கலெக்டர் வீரராக வராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், முதன்மை நகர்நல அலுவலர் சதீஷ் ராகவன், உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் தங்கவேல், சித்திரைவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட வளாகமாக ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனை தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் சுற்றச்சுழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் கேரிபைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பையை உபயோகபடுத்தவேண்டும். ஏனென்றால் பிளாஸ்டிக் பையினை பூமியில் போட்டால் பல ஆண்டு காலத்திற்கு பிறகும் அது பிளாஸ்டிக் பொருளாகவே இருக்கும். பொதுமக்கள் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீங்கினை கருத்தில் கொண்டு முற்றிலுமாக தவிர்த்து மாற்று பொருளை உபயோகப்படுத்தவேண்டும். இயற்கை வளங்களை நாம் மதித்தால்தான் இயற்கை நம்மை மதிக்கும் என தெரிவித்தார். #MaduraiHighCourt
    “சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது வருந்தத்தக்கது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தேனி பி.சி.பட்டியை சேர்ந்த கலாதேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கு 48 வயது ஆகிறது. கணவர் இல்லை. ஒரு ஆண், ஒரு பெண் என 2 பிள்ளைகள் உள்ளனர். பி.சி.பட்டி பகுதியில் பரமேஸ்வரி என்பவர் இடம் வாங்கினார். அவர் வாங்கிய இடத்துக்கு எதிரில் 10 அடி நடைபாதை உள்ளது. இந்த பாதையில் 3 அடி வரை நான் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததாக கூறப்பட்டது. இதனால் எனக்கும், பரமேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. ஒருவருடன் மற்றொருவர் சண்டை போட்டபோது, அவருடைய தாயார் விலக்கிவிட்டார். அப்போது நான் தள்ளிவிட்டதில் பரமேஸ்வரியின் தாயார் காயமடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பி.சி.பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட பின், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. ஒரு சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது ஏற்கத்தக்கதல்ல” என்று வாதாடினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் சாதாரண வழக்கில் கைதான பெண் மீது எப்படி குண்டர் சட்டத்தை பாய்ச்ச முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மனுதாரர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் எந்த அடிப்படையில் ஒப்புதல் அளித்தார்? அவரது செயல் வருந்தத்தக்கது” என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது குண்டர் சட்ட வழக்குப்பதிவு செய்தது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. விசாரிக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை வருகிற 23-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
    ×