என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madhyapradesh
நீங்கள் தேடியது "Madhyapradesh"
மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 70 வயது முதியவர் தனி ஆளாக பெரிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #70yearoldman #Haduavillage
போபால்:
மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage
மத்தியப்பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கடுயா கிராமத்தைச் சேர்ந்தவர் சீதாராம் ராஜ்புட். கடுயா கிராமத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தை வறட்சி வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், 70 வயதான சீதாராம் தனது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையை போக்க எண்ணினார். இதனால் பெரிய கிணறு ஒன்றை தோட்ட நினைத்தார். தனி ஆளாக கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். மேலிருந்து ஏணி அமைத்து அதன் வழியாக மண்ணை தோண்டி மேலே எடுத்துச் செல்கிறார். இந்த வயதில் சீதாராமின் கிராமத்திற்காக செய்யும் செயல் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய சீதாராம், 'எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் கிணறு தோண்டும் பணியை தொடங்கும். இதற்கு கிராமத்தை சேர்ந்த யாரும் உதவவில்லை. தனியாக நான் இதை செய்து முடிப்பேன்' என கூறினார். அவரின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். #70yearoldman #Haduavillage
மத்தியபிரதேச மாநிலத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மகனுக்கு தந்தை தடபுடல் விருந்து அளித்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #SSLCResult
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு.
இவர், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அன்சு தோல்வி அடைந்தார்.
இதையறிந்த அன்சு மனவேதனை அடைந்தார். தனது தந்தை என்ன சொல்வாரோ? என்ற கவலையுடன் தந்தையை சந்திக்க சென்றார்.
அப்போது தந்தை சுரேந்திரகுமார் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டினார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சுரேந்திரகுமார் இதோடு விடவில்லை. மகனின் பரீட்சை தோல்வியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தடபுடல் விருந்தும் அளித்தார்.
சுரேந்திர குமாரின் இந்த செயல்பாட்டை பார்த்து அனைவரும் வியந்தனர்.
பரீட்சைக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வி அடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
பரீட்சையில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
பள்ளியில் நடைபெறும் அரசு பரீட்சை என்பது மாணவரின் கடைசி பரீட்சை அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் அன்சு கூறும் போது, எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருக்கிறது என்றார். #SSLCResult
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் டிலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் அன்சு.
இவர், 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். இதன் முடிவு நேற்று வெளியானது. அதில், அன்சு தோல்வி அடைந்தார்.
இதையறிந்த அன்சு மனவேதனை அடைந்தார். தனது தந்தை என்ன சொல்வாரோ? என்ற கவலையுடன் தந்தையை சந்திக்க சென்றார்.
அப்போது தந்தை சுரேந்திரகுமார் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளவில்லை. மகனை கட்டித்தழுவி அவருக்கு இனிப்பு ஊட்டினார். தந்தையின் செயல்பாடு அன்சுவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சுரேந்திரகுமார் இதோடு விடவில்லை. மகனின் பரீட்சை தோல்வியை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அன்சுவுடன் படித்த மாணவர்கள், பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என பலரையும் தனது வீட்டுக்கு அழைத்தார். அங்கு இசை நிகழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தடபுடல் விருந்தும் அளித்தார்.
சுரேந்திர குமாரின் இந்த செயல்பாட்டை பார்த்து அனைவரும் வியந்தனர்.
பரீட்சைக்காக எனது மகன் கடுமையாக உழைத்தான். சிறப்பாக எழுதினான். ஆனாலும், தோல்வி அடைந்து இருக்கிறான். அவனது தோல்வியை நான் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.
அதே நேரத்தில் அவனை இன்னும் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.
பரீட்சையில் தோல்வி அடையும் அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் நான் ஒரு விஷயத்தை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
பள்ளியில் நடைபெறும் அரசு பரீட்சை என்பது மாணவரின் கடைசி பரீட்சை அல்ல. வாழ்க்கையில் தொடர்ந்து எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் அன்சு கூறும் போது, எனது தந்தையின் விருந்து கொண்டாட்டம் என்னை அடுத்த ஆண்டு தேர்வுக்கு மிகவும் ஊக்கப்படுத்தி இருக்கிறது என்றார். #SSLCResult
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X