search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kunnathur accident"

    குன்னத்தூரில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க சென்ற பனியன் கம்பெனி உரிமையாளர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28). இவர் குன்னத்தூர் பவர் அவுஸ் அருகே பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.

    ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒருசில நாட்கள் தாமதமானது. பின்னர் பணம் ஏற்பாடு செய்தார். பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது கருணாம்பதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (42) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். ராஜமணிக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×