என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kunnathur accident"
குன்னத்தூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 28). இவர் குன்னத்தூர் பவர் அவுஸ் அருகே பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒருசில நாட்கள் தாமதமானது. பின்னர் பணம் ஏற்பாடு செய்தார். பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது கருணாம்பதியை சேர்ந்த ராஜமாணிக்கம் (42) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பனியன் கம்பெனி உரிமையாளர் செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். ராஜமணிக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்