search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakonam youth attack"

    கும்பகோணம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா முருக்கங்குடி பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது25). கடந்த 5-ந்தேதி அப்பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பப்பு என்கிற பிரகா‌ஷக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் தனது நண்பர்கள் 6 பேருடன் சென்று பப்புவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று பப்பு என்கிற பிரகாஷ், தனது நண்பர்கள் அப்பு, ராகுல், பிரகாஷ், ராஜ்குமார், அலெக்ஸ், அன்புரோஸ் ஆகியோருடன் ஒரு காரில் கும்பகோணம் வந்துள்ளனர். பின்னர் 7 பேரும் ஊர் திரும்பியபோது செட்டிமண்டபம் பைபாஸ் பகுதியில் எதிரில் மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் வந்துள்ளார்.

    இதைக்கண்ட 7 பேரும் அவரை வழிமறித்து தூக்கி காரில் போட்டுக் கொண்டனராம். பின்னர் காரிலேயே கும்பகோணத்தை சுற்றிசுற்றி வந்து அவரை கடுமையாக தாக்கினராம். பலமணி நேரத்துக்குப்பிறகு மணிகண்டனை மீண்டும் செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் கொண்டு வந்து தூக்கி வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மணிகண்டன் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 7 பேரையும் கைது செய்து காரையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×