search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Korattur"

    கொரட்டூரில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    கொரட்டூர், கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இரவி. இவரது மகன் அரவிந்தன் (வயது 24) ரவுடி. இவர் மீது கொரட்டூர், அம்பத்தூர் தொழில்பேட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு 9 மணி அளவில் அரவிந்தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 5 வாலிபர்கள் அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அரவிந்தன் வீட்டு வாசலில் நின்றபடி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    திடீரென அவர்கள் அரவிந்தனை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து அரவிந்தனின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அங்கு அரவிந்தன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறி துடித்தனர்.

    இது குறித்து கொரட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரவிந்தன் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது கடந்த 6 மாதத்துக்கு முன்பு மஞ்சுளாவை அரவிந்தனின் சகோதரர் வெட்டியுள்ளார். இதனால் மஞ்சுளா- அரவிந்தன் குடும்பத்தினரிடையே மோதல் அதிகரித்து இருக்கிறது.

    இந்நிலையில் மஞ்சுளாவின் மகன் ஆகாசை கடந்த 3 மாதத்துக்கு முன்பு அரவிந்தனும், அவரது சகோதரர்களும் வெட்டி கொல்ல முயற்சி செய்தனர்.

    இந்த வழக்கில் அரவிந்தன் கைது செய்யப்பட்டு இருந்தான். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் அவன் ஜாமீனில் வெளியே வந்தார்.

    எனவே மஞ்சுளா குடும்பத்தினருடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் அரவிந்தன் தீர்த்துக் கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஆகாஷ், அவரது நண்பர்கள் பிரசாந்த், விக்கி, மணி ஆகிய 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. #tamilnews

    ×