search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala police driver"

    டிரைவர் மீதான புகார் பொய் என தெரிய வந்தால் ஏ.டி.ஜி.பி. மகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள டி.ஜி.பி. அறிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரள போலீசில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் சுதேஷ்குமார்.

    இவரது கார் டிரைவராக போலீஸ்காரர் கவாஸ்கர் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஏ.டி.ஜி.பி. சுதேஷ் குமாரின் மகள், போலீஸ்காரர் கவாஸ்கரை தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கவாஸ்கர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    டிரைவர் கவாஸ்கர் கொடுத்த புகார் தொடர்பாக ஏ.டி.ஜி.பி.யின் மகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது போல கவாஸ்கர் மீது ஏ.டி.ஜி.பி.யின் மகளும் புகார் கொடுத்தார். அதன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

    இதற்கிடையே திருவனந்தபுரத்தில் நடந்த போலீஸ் கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசும் போது, போலீசார், போலீஸ் அதிகாரிகளுக்கு அடிமைப்பணி செய்ய நியமிக்கப்படவில்லை. அவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யவே பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

    போலீசார் அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கவும், எடுபிடி வேலைகள் செய்யவும் கூடாது. இது போன்ற பணிகளை செய்ய போலீசாரை வற்புறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இந்நிலையில் கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா இப்பிரச்சனை குறித்து கூறியதாவது:-

    போலீஸ்காரரை போலீஸ் ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கிய விவகாரம் குறித்து குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. விசாரணை நடத்துவார்.

    போலீஸ்காரர் மீது ஏ.டி.ஜி.பி.யின் மகள் கொடுத்த புகார் குறித்தும் விசாரிக்கப்படும். இதில் உண்மை இல்லை என தெரிய வந்தால் அது குறித்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே கேரளாவில் போலீஸ் அதிகாரிகளுக்கு அடிமைப்பணி செய்யும் போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இது போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
    கேரளாவில் போலீஸ் டிரைவரை அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட டிரைவரின் மனைவி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளவர் சுதேஷ்குமார். இவரது மகள் ஸ்நேகிதா (வயது 22). ஏ.டி.ஜி.பி.க்கு ஜீப் டிரைவராக உள்ளவர் கவாஸ்கர் (35). நேற்று முன்தினம் கவாஸ்கரை ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கினார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.

    இதனையடுத்து அவர் பேரூர்கடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் மியூசியம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர்.

    தாக்கப்பட்ட ஜீப் டிரைவர் கவாஸ்கர்.

    இந்நிலையில் நேற்று கவாஸ்கரின் மனைவி ரேஸ்மா கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தார். மனுவில், ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் தனது நாயை குளிப்பாட்ட அடிக்கடி எனது கணவரை கட்டாயப்படுத்துவார். பல நேரங்களில் என் கணவர் நாயை குளிப்பாட்டினார். சில நேரங்களில் மறுத்துள்ளார். இதனால் ஏ.டி.ஜி.பி.க்கு எனது கணவர் மீது கோபம் ஏற்பட்டது. இது தவிரஅவரது மனைவி காய்கறி வாங்க அனுப்புவார். அவரது மகள் குப்பை கூழங்களை கூட்ட செய்வார். வேலைகளை செய்ய தவறினால் தகாத வார்த்தைகளில் குடும்பமே திட்டுவதாக என்னிடம் அடிக்கடி கூறி வருத்தப்படுவார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் அவர் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, கேரளாவில் தற்போது சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவம் கேரளாவிற்கு பெரும் தலைகுனிவு. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அவர் உறுதியளித்தார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
    ×