என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் டிரைவரை அடித்த அதிகாரி மகள்- கேரள முதல்வரிடம் புகார்
Byமாலை மலர்16 Jun 2018 6:36 AM GMT (Updated: 16 Jun 2018 6:36 AM GMT)
கேரளாவில் போலீஸ் டிரைவரை அடித்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட டிரைவரின் மனைவி முதல்வரிடம் புகார் மனு அளித்துள்ளார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளவர் சுதேஷ்குமார். இவரது மகள் ஸ்நேகிதா (வயது 22). ஏ.டி.ஜி.பி.க்கு ஜீப் டிரைவராக உள்ளவர் கவாஸ்கர் (35). நேற்று முன்தினம் கவாஸ்கரை ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கினார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.
இதனையடுத்து அவர் பேரூர்கடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் மியூசியம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர்.
இந்நிலையில் நேற்று கவாஸ்கரின் மனைவி ரேஸ்மா கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தார். மனுவில், ஏ.டி.ஜி.பி. சுதேஷ்குமார் தனது நாயை குளிப்பாட்ட அடிக்கடி எனது கணவரை கட்டாயப்படுத்துவார். பல நேரங்களில் என் கணவர் நாயை குளிப்பாட்டினார். சில நேரங்களில் மறுத்துள்ளார். இதனால் ஏ.டி.ஜி.பி.க்கு எனது கணவர் மீது கோபம் ஏற்பட்டது. இது தவிரஅவரது மனைவி காய்கறி வாங்க அனுப்புவார். அவரது மகள் குப்பை கூழங்களை கூட்ட செய்வார். வேலைகளை செய்ய தவறினால் தகாத வார்த்தைகளில் குடும்பமே திட்டுவதாக என்னிடம் அடிக்கடி கூறி வருத்தப்படுவார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் அவர் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, கேரளாவில் தற்போது சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவம் கேரளாவிற்கு பெரும் தலைகுனிவு. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அவர் உறுதியளித்தார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
கேரள மாநில ஏ.டி.ஜி.பி.யாக உள்ளவர் சுதேஷ்குமார். இவரது மகள் ஸ்நேகிதா (வயது 22). ஏ.டி.ஜி.பி.க்கு ஜீப் டிரைவராக உள்ளவர் கவாஸ்கர் (35). நேற்று முன்தினம் கவாஸ்கரை ஏ.டி.ஜி.பி. மகள் தாக்கினார். இதில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.
இதனையடுத்து அவர் பேரூர்கடை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் மியூசியம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் கூறினர்.
தாக்கப்பட்ட ஜீப் டிரைவர் கவாஸ்கர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் அவர் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறும்போது, கேரளாவில் தற்போது சில விரும்ப தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இந்த சம்பவம் கேரளாவிற்கு பெரும் தலைகுனிவு. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அவர் உறுதியளித்தார். #IPSOfficerDaughter #PoliceDriverAttacked #Kerala
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X