என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karaikkal ammaiyar"

    • பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார்.
    • மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.

    காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த விழாவானது, இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    பவுர்ணமியன்று சிவபெருமான், பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வருவார். அப்போது மக்கள் உயரமான இடத்தில் இருந்து வீதியில் வரும் பிச்சாடனரை நோக்கி மாங்கனிகளை வீசுவர்.

    குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாத பெண்கள், இந்த மாங்கனிகளை தங்களது சேலை முந்தானையை விரித்து தாங்கிப் பிடிப்பர். அந்த மாங்கனியை சாப்பிடுவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    • கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது.
    • பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.

    காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் பகுதியில் பெரும் வணிகராக இருந்தவர், தனதத்தன். இவரது மகள் புனிதவதி. இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவராக இருந்தார். பருவ வயதை எட்டியதும் புனிதவதியை, நாகப்பட்டினத்தில் வசித்த பரமதத்தர் என்ற வணிகருக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.

    ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையில் இருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர் அங்கு வந்தார். அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் காய்த்த 2 மாங்கனிகளை பரமத்தத்தரிடம் கொடுத்தார். அந்த கனிகளை, வேலையாள் மூலமாக தனது வீட்டிற்கு கொடுத்தனுப்பினார் பரமதத்தர்.

    இந்தநிலையில் புனிதவதியின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய சிவபெருமான், ஒரு அடியார் வேடத்தில் புனிதவதியின் வீட்டின் முன்பு வந்து நின்றார். வீட்டின் முன்பு யாசகம் கேட்டு நின்ற அடியாரை வரவேற்ற புனிதவதி, வீட்டின் திண்ணையில் அவரை அமரவைத்து, தயிர் கலந்த அன்னம் படைத்தார். அதோடு கணவர் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் சிவனடியாருக்கு சாப்பிடத் தந்தார். இதையடுத்து உணவருந்திய மகிழ்ச்சியில் சிவனடியார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    சிவனடியார் சென்ற சிறிது நேரத்தில் வழக்கம் போல, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்தார் பரமதத்தர். அவருக்கு பல வகை உணவுகளை சமைத்து பரிமாறினார் புனிதவதி. அதோடு மீதம் இருந்த மாங்கனி ஒன்றையும் இலையில் வைத்தார். மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தான் கொடுத்து அனுப்பியதில் மீதம் இருக்கும் மற்றொரு மாங்கனியையும் எடுத்துவரும்படி பரமதத்தர் கூறினார்.

    கணவர் அப்படிக் கேட்டதும் பதறிப்போனர், புனிதவதி. 'கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை அடியாருக்கு சமர்ப்பித்து விட்டேன் என்று கூறினால் கணவர் கோபித்துக் கொள்வாரோ' என்று கருதிய புனிதவதி, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். பின்னர் நேரடியாக பூஜை அறைக்குச் சென்று சிவபெருமானை மனமுருக வேண்டினார். அப்போது புனிதவதியின் கையில் ஒரு மாங்கனி வந்தது. மகிழ்ச்சி அடைந்த புனிதவதி, அதை எடுத்துச் சென்று கணவருக்குக் கொடுத்து உபசரித்தார்.

    ஆனால் முந்தைய கனியை விட, இந்த மாங்கனி இன்னும் அதிக சுவையுடன் இருந்ததால் பரமதத்தர் சந்தேகம் கொண்டார். 'ஒரே மரத்தில் விளைந்த இரு மாங்கனிகளின் சுவை மாறுபடுமா?' என்று நினைத்தவர், தன் மனைவியிடம் உண்மையை கூறும்படி கேட்டார். புனிதவதி, நடந்த விஷயங்களை கணவரிடம் கூறினார். ஆனால் அதை நம்ப பரமதத்தர் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. "சிவபெருமான் உனக்கு கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை இங்கேயே வரவழைத்து காட்டு" என்று மனைவியை நிர்ப்பந்தித்தார். புனிதவதி மீண்டும் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி அவரது கையில் வந்து, சிறிது நேரத்தில் மறைந்தது.

    இறைவனின் இந்த திருவிளையாடலை கண்டு வியந்துபோன பரமதத்தர், "நீ.. மனிதப் பிறவி அல்ல. தெய்வப் பெண். உன்னுடன் நான் இனி வாழ்வது சரியல்ல" என்று கூறி, புனிதவதியைப் பிரிந்து, பாண்டியநாடு சென்று அங்கு வணிகம் செய்தார். சில காலத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பரமதத்தர், தன்னுடைய முதல் மனைவியான புனிதவதியின் பெயரைச் சூட்டினார்.

    இதற்கிடையே கணவரை காணாது துவண்டுபோன புனிதவதிக்கு, பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு புறப்பட்ட புனிதவதி, பரமதத்தனின் இல்லத்தைச் சென்றடைந்தார். தன்னைத் தேடி வந்த புனிதவதியின் காலில் விழுந்து வணங்கிய பரமதத்தர், அதேபோல் தனது மனைவி, மகளையும் விழச்செய்தார்.

    கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத புனிதவதி, தனது அழகுமேனியை அழித்து பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவனும் அப்படியே ஆசி வழங்கினார். பேய் உருவத்துடன் சிவபெருமானைக் காண, கயிலாய மலைக்கு பயணமானார் புனிதவதி.

    கயிலாயம் புனிதமான இடம் என்பதால், காலை ஊன்றி நடக்காமல், தலையால் நடந்து சென்றார். இதைப் பார்த்த சிவபெருமான், "அம்மையே வருக.. அமர்க.." என்று அழைத்தார். மேலும் "உனக்கான வரத்தைக் கேள்" என்றார்.

    அதற்கு புனிதவதி அம்மை, "இறைவா.. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பிருந்தால் உனையென்றும் மறவாமை வேண்டும், எப்போதும் நீ ஆடும்போது உன் காலடியின் கீழ் நான் இருக்க வேண்டும்" என்று வரம் கேட்டார். அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டினார். சிவபெருமானே 'அம்மையே' என்று அழைத்ததாலும், புனிதவதி பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும், அவர் 'காரைக்கால் அம்மையார்' என்று பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையாரை திருவாலங்காடு திருத்தலத்திற்கு வரச்செய்து, அங்கு தன்னுடைய திருவடியின் கீழ் என்றும் இருக்க அருள்புரிந்தார், சிவபெருமான்.

    சைவ சமயத்தை வளர்த்த சான்றோர்களில் பெண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இவர்களில் காரைக்கால் அம்மையார் குறிப்பிடத்தக்கவர்.
    சைவ சமயத்தை வளர்த்த சான்றோர்களில் பெண்களுக்கும் பெரும் பங்கு உண்டு. அதில் மிக மிக முக்கியமானவர்கள் திலகவதியார், மங்கையர்கரசியார் மற்றும் காரைக்கால் அம்மையார் போன்றவர்கள். இவர்களில் காரைக்கால் அம்மையார் குறிப்பிடத்தக்கவர். இறைவனின் திருவடியில் இருக்கும் பேறு பெற்றவர். 63 நாயன்மார்களில் ஒரே ஒரு பெண் நாயன்மாராக இருக்கும் பெருமைக்குரியவர் இவர்.

    காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்து விளங்கினார். இவர் பருவ வயதை அடைந்ததும், நாகப்பட்டினத்தில் உள்ள நிதிபதி என்ற வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பின் பரமதத்தன் காரைக்காலிலேயே தங்கி வணிகத்தில் சாதனை புரிந்து வந்தார். புனிதவதியோ திருமணத்துக்கு பிறகும் சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார்.

    ஒரு நாள் வணிகரான பரமதத்தனுக்கு அவரது நண்பர்கள் இரு மாங்கனிகளைக் கொடுத்தனர். அவற்றை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை புனிதவதி பெற்றுக் கொண்டு தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார்.

    அந்த சமயத்தில், சிவபெருமான் அடியார் வேடம் கொண்டு கடுமையான பசியுடன் புனிதவதியின் வீட்டு வாசலில் வந்து நின்றார். அவரைக் கண்ட புனிதவதி ‘‘அடுப்பில் உலை வைத்து இருக்கிறேன், சற்று பொறுங்கள்.’’ என்றார். அதற்கு சிவனடியார் ‘‘அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!’’ என்றார்.

    அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகள் நினைவுக்கு வந்தது, உடனே அவற்றில் ஒன்றை எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தார். மாங்கனியை உண்டு மகிழ்ந்த சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார்.

    வெளியில் வியாபாரத்திற்கு சென்றிருந்த பரமதத்தன், தன் மனைவி புனிதவதியை அழைத்தவாறு வீட்டிற்குள் நுழைந்தார். பிறகு மதிய உணவு உண்பதற்காக அமர்ந்த பரமதத்தன், தனது மனைவி புனிதவதியை பார்த்து, ‘‘மதிய உணவிற்கு பின் உண்பதற்காக கொடுத்து அனுப்பிய மாங்கனிகளை எடுத்து வா!’’ என்றான். பதறிப் போன புனிதவதி சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து நீட்டினாள். அக்கனியை உண்ட பரமதத்தன், அதன் சுவை காரணமாக அடுத்த மாங்கனியையும் உண்ண விரும்பி, புனிதவதியை நோக்கி, ‘‘இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வா!’’ என்றான்.

    இதைக் கேட்ட புனிதவதி, சிவனடியாருக்கு மாங்கனியை கொடுத்ததைச் சொன்னால் தன் கணவன் கோபம் கொள்வாரே! என்று எண்ணி பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் வேண்டி துதித்தாள். சிவனடியாராக வந்தவர் சிவபெருமானாயிற்றே! எனவே அவர் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அக் கனியை சுவைத்த பரமதத்தனுக்கு தான் முன்பு உண்ட மாங்கனியை விட இக்கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான்.

    கணவனின் கேள்விக்கு பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெரு மானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான். புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பரமதத்தனுக்கு தனது மனைவியிடம் ஒட்டி உறவாட மனம் இல்லை. எனவே வணிகத்தில் முழு கவனத்தையும் செலுத்தினான்.

    வியாபாரம் சம்பந்தமாக பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான்.

    இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2–வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, பழைய மாங்கனி சம்பவத்தை கூறி அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

    கணவனே தன்னை தெய்வம் என்று கூறி காலில் விழுந்து வணங்கியதால் இனி தன் அழகு உடல் தனக்கு தேவையில்லை என்று எண்ணி, எலும்போடு கூடிய பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டினார். அதன்படி பேய் உருவம் பெற்று அற்புதத் திருவந்தாதி பாடல்களை பாடினார். பின்பு காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கி அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார்.

    சிவபெருமான் இருக்கும் கயிலாயத்தை காணச் செல்லும்போது காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே நடந்து சென்றார். அவரைக் கண்ட பார்வதி தேவி, ‘‘பேய் உருவில், தலைகீழாக நடந்து வரும் இந்தப் பெண் யார்?’’ என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு இறைவன், ‘‘இவள் நம்மை பேணும் அம்மை’’ என்று கூறிக் கொண்டு, ‘‘அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?’’ என்று புனிதவதியை நோக்கி கேட்டார்.

    அகிலத்துக்கும் அம்மையப்பனாக விளங்கும் சிவபெருமானே ‘அம்மையே’ என்று புனிதவதியை அழைத்ததால் காரைக்கால் அம்மையார் எனப் பெயர் பெற்றார். காரைக்கால் அம்மையிடம் இறைவன் என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, ‘‘இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்’’ என்றார் காரைக்கால் அம்மையார்.

    உடனே சிவபெருமான், ‘‘அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்’’ என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு கழிப்பதாக ஐதீகம்.

    இத்தகைய சிறப்பு பெற்ற காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனி படைத்தது, சிவபெருமானிடம் அம்மையார் மாங்கனி பெற்றது போன்ற நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமி அன்று காரைக்காலில் உள்ள ‘காரைக்கால் அம்மையார்’ திருக்கோவிலில் மாங்கனி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    காரைக்கால் அம்மையாரின் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.
    காரைக்கால்... இது ஒரு ஆன்மிக வனப்பும், வியாபார வனப்பும் நிறைந்த அருள்பூமி. இங்கு ஒரு வீட்டில் முழுநேரமும் சிவநாமம் கேட்டுக் கொண்டே இருக்கும். அது புனிதவதியின் வீடு.

    ஒரு நாள் ‘அம்மா’ என்ற குரல் வாசலில் கேட்க திரும்பிப் பார்த்தாள் புனிதவதி. வீட்டு வாசலில் சிவனடியார் ஒருவர், பசியால் வாடி வதங்கி நின்றிருந்தார். ‘அடுப்பில் இப்போதுதான் உலை வைத்திருக்கிறேன். சற்றுபொறுங்கள்’ என்று கூறினாள். ஆனால் அவ்வளவு பொறுமை சிவனடியாருக்கு இல்லை. அந்த அளவுக்கு பசி.

    ‘இல்லை தாயே! பசியில் உயிர் போகிறது. ஏதேனும் இருப்பதைக் கொடு தாயே’ என்றார் சிவனடியார்.

    சற்றே யோசித்தவளுக்கு மதிய உணவிற்காக தன் கணவன் பரமதத்தன் கொடுத்தனுப்பிய இரண்டு மாங்கனிகள் நினைவுக்கு வந்தது. உடனே அதில் ஒரு மாங்கனியை எடுத்து வந்து சிவனடியாருக்கு கொடுத்து மகிழ்ந்தாள். சிவனடியார் அதை உண்டு மகிழ்ந்தார்.

    ‘பசியும்.. தான் வந்த பணியும் முடிந்ததில், புனிதவதியை வாழ்த்தி விட்டு, அந்தச் சிவனடியார் மறைந்தார். ஆம்! சிவனடியார் வேடத்தில் வந்தவர் சிவபெருமான்.

    வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்த பரமதத்தன், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிட்டான். சமைத்து வைத்த அறுசுவை உணவுகளை, அன்புக் கணவனுக்கு பரிமாறினாள் புனிதவதி.

    ‘புனிதா! நான் கொடுத்தனுப்பிய மாங்கனியைக் கொண்டு வா’ என்றான் பரமதத்தன்.

    சிவனடியாரிடம் கொடுத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை எடுத்து வந்து தன் கணவனுக்கு கொடுத்தாள். அதை உண்டவன், மாங்கனியின் சுவையில் மயங்கிப்போனான். அதன் விளைவு.. மற்றொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி தன் மனைவியிடம் கூறினான். பதறித்தான் போனாள் புனிதவதி.

    ‘மற்றொரு கனியை சிவனடியாருக்கு கொடுத்து விட்டேன்’ என்று கூறினால், எங்கே கணவன் கோபித்துக் கொள்வானோ என நினைத்த புனிதவதி, பூஜை அறையை நோக்கிச் சென்றாள். ஈசனை நோக்கி ‘ஓம் நமசிவய’ என்று துதித்தாள். தான் இக்கட்டில் மாட்டிக் கொண்டதை கூறிச் சிவபெருமானை வேண்டினாள்.

    இறைவனைத் துதிப்பதற்காக புனிதவதி ஒன்றிணைத்த கைகளில் ஒரு மாங்கனி வந்துஉதித்தது. ‘தன் பிரச்சினை தீர்ந்து விட்டது’ என்று எண்ணிய புனிதவதி, அந்த மாங்கனியை கணவனிடம் கொண்டுபோய் கொடுத்தாள். ஆனால் அந்த மாங்கனியால் தான் புதிய பிரச்சினை ஆரம்பமாகப் போகிறது என்பதை அப்போது அவள் அறியவில்லை.

    மனைவி கொடுத்த இரண்டாவது மாம்பழத்தை ஆவலுடன் சாப்பிட்டான் பரமதத்தன். முந்தைய மாம்பழத்தை விட, இதன் சுவை பன்மடங்கு அதிகமாக இருந்தது. ‘ஒரே மரத்தில் உள்ள இரண்டு மாம்பழங்களின் சுவையில் இவ்வளவு பெரிய மாற்றம் இருக்குமா?’ என்று சந்தேகித்த பரமதத்தன், புனிதவதியிடம் இதுபற்றி கேட்டான். கணவனிடம் பொய் உரைக்க பயந்த புனிதவதி, நடந்தவற்றை அப்படியே பதற்றத்துடன் கூறி முடித்தாள். அதைக்கேட்டதும், புனிதவதியிடம் இருந்த பயமும், பதற்றமும் பரமதத்தனைத் தொற்றிக்கொண்டது.

    ‘நீ கூறுவது உண்மையானால், ஈசனிடம் இருந்து இன்னொரு மாம்பழத்தை பெற்று எனக்குத் தருக’ என்றான் பரமதத்தன். புனிதவதியும் ஈசனை வேண்டினாள். இன்னொரு மாம்பழம் அவள் கையில் வந்தது. மறுநொடியே புனிதவதியின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் பரமதத்தன். பதறிப்போனாள் புனிதவதி.

    ‘தாயே! நீ சாதாரணப் பெண் அல்ல; தெய்வ மங்கை’ என்று போற்றித் துதித்தான். தெய்வத்துடன் இல்லறம் நடத்துவது தகாது என்று கருதியவன் வீட்டை விட்டு வெளியேறினான். பாண்டிய நாட்டுக்குச் சென்றவன், அங்கு திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் என்னும் தலத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு, ‘புனிதவதி’ என்று பெயரிட்டான்.

    வருடங்கள் பல ஓடியும், வழிமேல் விழி வைத்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி. வெகு காலம் கழித்துதான் பரமதத்தனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது அவளுக்கு தெரியவந்தது. வாழ்வை வெறுத்து வாடினாள். தன்அழகிய உருவை விடுத்து, ஈசனிடம் வேண்டி பேய் உருவை (எலும்பு வடிவம்) கேட்டுப் பெற்றாள். பின்னர் கயிலைமலையானை தரிசனம் செய்யப் புறப்பட்டாள் புனிதவதி. சிவன் இருக்கும் கயிலையில் காலால் நடப்பது குற்றம் என்றெண்ணி, தன் தலையால் நடந்து சென்றாள்.

    ஈசனுடன் வீற்றிருந்த பார்வதிதேவி இதைக்கண்டு, ‘சுவாமி! பேய் உருவில் தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?’ என்று வினவினார்.

    அதற்குச் சிவபெருமான், ‘இவள் நம்மைப் பேணும் அம்மை!’ என்றார். தம்மை நாடி வந்த புனிதவதியைப் பார்த்து, ‘அம்மையே! நலமாக வந்தனையோ?. நம்மிடம் வேண்டுவது யாது?’ என்று கேட்டார்.

    அகிலத்துக்கும் அம்மையப்பனாக விளங்கும் சிவபெருமானே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், புனிதவதியின் பிறந்த ஊர் காரைக்கால் என்பதாலும் புனிதவதி, ‘காரைக்கால் அம்மையார்’ என்று பெயர் பெற்றார்.

    ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்ட ஈசனிடம், ‘ஐயனே! உம்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும். மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். எப்போதும் உமது திருவடியில் வீற்றிருந்து, உமது நாமம் பாடும் வரம் வேண்டும்’ என்று வேண்டினார் காரைக்கால் அம்மையார்.

    அவ்வாறே வரம் அளித்தார் ஈசன். ‘அம்மையே! நீ பூலோகத்தில் ஆலவனம் உள்ள திருவாலங்காடு சென்று, அங்கு எமது திருவடியின் கீழ் இருந்து என்றும் பாடும் வரம் தந்தோம்’ என்று அருளினார். காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு புறப்பட்டார். திருவாலங்காடு முன்பாக உள்ள பழையனூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்து செல்ல அவருக்கு வழி தெரியவில்லை. ஒரே காடாக இருந்தது.

    ஆகவே பழையனூரில் வீற்றிருந்த சிவபெருமானிடம் காரைக்கால் அம்மையார் வேண்டினார். ‘ஈசனே! ஒரே காடாக உள்ளது. எந்த திசையில் சென்று நான் திருவாலங்காட்டை அடைவது?’ என்று கேட்டார்.

    அப்போது ஆலய கருவறையில் இருந்து ‘இங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்’ என்று அசரீரி ஒலித்தது. அவ்வாறே சென்றார் காரைக்கால் அம்மையார். அவருக்கு வழி தெரிவதற்காக வழிநெடுகிலும் சிவலிங்கமாக காட்சிக் கொடுத்தார் சிவபெருமான். ஆகையால் தலையால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார் காரைக்கால் அம்மையார். அங்கு அம்மைக்கு, ஈசன் திருநடனம் காட்டினார். அதனை கண்டுக் களித்த காரைக்கால் அம்மையார், ‘திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ என்னும் இரண்டு பதிகங்களைப் பாடினார். இது பன்னிரு திருமுறையில் பதினொன்றாவது திருமுறையாக உள்ளது. ஆனால் இது தேவாரத்திற்கு முன்னதாக பாடப்பெற்றது.

    தொடர்ந்து ஈசனடியில் அம்மை ஐக்கியமானார். காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோவில் உள்ளது. இத்தலத்தில் ஈசனின் திருநாமம் கைலாசநாதர். அம்பிகையின் திருநாமம் சவுந்தராம்பாள் என்பதாகும். காரைக்கால் அம்மையாரின் பொருட்டு ஆண்டுதோறும் ஆனி மாத பவுர்ணமியன்று ஈசன் அம்மைக்கு அளித்ததும், அம்மையார் ஈசனுக்குப் படைத்ததுமான மாங்கனியின் பெயராலேயே ‘மாங்கனித் திருவிழா’ இங்கு வெகுசிறப்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக 4-ம் நாள் அதிகாலை 4 மணிக்கு, காரைக்கால் நகரத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்படும். அப்போது கயிலாசநாதர் ஆலயத்தின் வாசலில் ஈசனை உருவகித்து, தீபச் சுடர் ஒன்றை ஏற்றுவார்கள். அப்போது காரைக்கால் அம்மையார் கோவிலிலும் காரைக்கால் அம்மையாரை உருவகித்து தீபச் சுடர் ஒன்று ஏற்றப்படும். அந்த தீபச்சுடரை எடுத்துவந்து கயிலாசநாதர் ஆலயத்தில் உள்ள ஈசனின் தீபச்சுடரில் சேர்ப்பார்கள். ஆம்!காரைக்கால் அம்மையார் சிவபெருமானின் திருவடியில் சேர்வதைக் குறிப்பதாக இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் வழியாக 39 கிலோமீட்டர் தூரத்தில் காரைக்கால் அமைந்துள்ளது.
    மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, தீர்த்தகரைக்கு அம்மையாரும், குதிரை வாகனத்தில் பரமதத்த செட்டியாரும் வந்தனர்.

    விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி, விக்ராந்த் ராஜா, அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.தொடர்ந்து, இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள்.

    திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. வீதிஉலாவின்போது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

    பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைத்தல், இரவு 9 மணிக்கு சித்திவிநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார். 
    கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
    காரைக்காலைப் போன்றே கன்னியாகுமரியில் உள்ள மிகவும் பழமையான பார்வதி அம்மன் சமேத குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

    இங்கு குகநாதீஸ்வரர் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வர, பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வலம்வர அதுசமயம் பக்தர்கள் மாங்கனி படைத்தும், இறைத்தும் வழிபட்டு ஈசனின் இன்னருள் பெறுகிறார்கள். 
    ×