search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalyanam"

    முருகப்பெருமான் சூரர்களுடன் போரில் ஈடுபடும் முன் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுவே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.
    தமிழ் மாதத்தில் கடைசி மாதமாக திகழும் பங்குனியில், உத்திர நட்சத்திரம் வரும் நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் ‘குலதெய்வ வழிபாட்டால் குலம் விருத்தியாகும்’ என்ற வழக்காடு வெகு சிறப்புற்று காணப்படுகிறது. இந்நாளில் தங்களுடைய குலதெய்வம், சாஸ்தாவை மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் பழனியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இது சிறப்பு பெற்று விளங்குகிறது.

    குறிப்பாக முருகப்பெருமான் சூரர்களுடன் போரில் ஈடுபடும் முன் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுவே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.

    அதாவது குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் தேரோட்டியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழிமறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாமல் அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார்.

    அதில், கிரவுஞ்சன் என்னும் மன்னன் எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தியானவனாக இருந்தான். அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகி நின்றாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டனம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசரன் ஆட்சி செய்து கொண்டு தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் சொன்னார்.

    அதைகேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய் தாரகாசுரனை அழித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்துக்குள் நுழைந்தன. இதையறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்ததில் இரு பக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்பெருமானின் படையில் இருந்த வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தி சாய்த்தான். மூர்ச்சையாகி வுழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான்.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாரகாசுரனை தாக்கினான். எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைதொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான் போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாமல் தாரகாசுரன் சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல் மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகாசுரனை கொன்றது. அதன்பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். 
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்காக, ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் எழுந்தருளினார்.

    மாலையில் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, சன்னதி தெரு வழியாக ஆனந்தவல்லி சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலுக்கு சென்றார்.

    தொடர்ந்து சுவாமியும், வள்ளி அம்பாளும் கீழரத வீதி பந்தல் மண்டப முகப்பில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து, கோவிலை சேர்ந்தனர். இரவில் கோவிலில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர் கள் பாத யாத்திரையாகவும், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    விழாவையொட்டி பக்தர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தன்று நடக்கும் வள்ளி கல்யாணத்தை தரிசிப்பதாலும், மாவிளக்கு ஏற்றுவதாலும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருமணம் நடக்கிறது. அதிகாலையில் பள்ளியறையிலிருந்து குமரவிடங்கர் கருவறைக்குக் கிளம்புவார். அபிஷேகம், அலங்காரம் முடிந்தவுடன் தீபாராதனை நடக்கும்.

    பின் பெரிய பூஞ்சப்பரத்தில் மேலக்கோயில் சென்று தவத்தில் ஆழ்வார். மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோயில் முன்புள்ள பந்தல் மண்டப முகப்பிற்கு வருவார். அப்போது வள்ளியம்மை மணமகள் கோலத்தில் எதிரில் வந்ததும், இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நிகழும்.

    பக்தர்கள் இந்நாளில், வள்ளிநாயகிக்கு தினை மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இந்நிகழ்ச்சி, முருகனுக்கு வள்ளி தேனும் தினைமாவும் வழங்கியதை நினைவூட்டுவதாக உள்ளது. வள்ளி கல்யாணத்தை தரிசிப்பதாலும், மாவிளக்கு ஏற்றுவதாலும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.

    ×