என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » jewelry shop manager dies
நீங்கள் தேடியது "jewelry shop manager dies"
மேட்டுப்பாளையம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் நகை கடை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாயப்பனூர் ரோட்டில் உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ்பாபு. (வயது 36). இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மானேஜராகப் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் காந்திபுரம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கின் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீர் என இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீஸ் பாபுவை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாயப்பனூர் ரோட்டில் உள்ள மகாலட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ்பாபு. (வயது 36). இவர் மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மானேஜராகப் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல் கடையில் வேலை முடிந்து வீட்டிற்கு தனது இரண்டு சக்கர வாகனத்தில் புறப்பட்டார். மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் காந்திபுரம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கின் முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீர் என இரண்டு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரதீஸ் பாபுவை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலே இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X