search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery stolen"

    • ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூரை சேர்ந்தவர் காத்தூன் பீவி. இவரது கணவர் அப்துல் ரஹீம். இருவரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டில் பின்புறமாக உள்ள வாசல் கதவை உடைத்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள கதவை தட்டினர்.

    இந்த சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த காத்தூன் பீவி, கதவை திறக்க வந்தபோது முகத்தை மறைத்துக்கொண்டு சட்டை அணியாமல் கருப்பு டவுசர் அணிந்து நின்றுகொண்டிருந்த 2 மர்ம நபர்கள் காத்தூன்பீவி அணிந்திருந்த 11பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து உறவினர் ஆனந்தூரைச் சேர்ந்த பாரக் அலி (37) கொடுத்த புகாரின்பேரில் ஆர்.எஸ். மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×