search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jallikattu person injured"

    காரிமங்கலம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். #jallikattu
    காரிமங்கலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ராமாபுரம் பகுதியில் எருதுவிடும் விழா நடைபெற்றது.  இதில் 12 கிராமங்களை சேர்ந்த எருதுகள் அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டது. இதை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். மாடுகள் இழுத்து வரும் நிலையில் வேடிக்கை பார்த்து வந்தவர்கள் அங்குமிங்கும் ஓடினர். 

    இதில் மாடு ஒன்று முட்டியதில், வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காரிமங்கலம் அடுத்த கீழ்கொள்ளுப்பட்டியை சேர்ந்த  கட்டிட மேஸ்திரி ரவி (37) என்பவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #jallikattu
    ×