என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Iron tablets"
- பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
- சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
உடுமலை:
வளர் இளம் பருவத்திலுள்ள பள்ளி மாணவிகளுக்கு ரத்தசோகை நோய் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், போலிக் அமிலம் கொண்ட இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டத்தின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாத்திரைகள் வழங்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
உடுமலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட்டது. எஸ்.வி.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம், ஆசிரியை சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் ரத்த சோகையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், காய்கறி மற்றும் கீரை வகைகள் உட்பட சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்