search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hundi income"

    திருப்பதி கோவிலில் நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று வைகாசி விசாகம் சனிக்கிழமை வந்துள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஏழுமலையானை நேற்று முன்தினம் முழுவதும் 79,251 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    நேற்று காலை நிலவரப்படி 39 காத்திருப்பு அறைகளில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 18 மணி நேரத்திற்கு பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர்.

    நேற்று பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.4.10 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

    அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம், அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம், கோசம்ர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், சர்வஸ்ரேயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம், வேதபரிர‌ஷண அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் என ரூ.30 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    பழனி முருகன் கோவிலில் 29 நாளில் உண்டியல் மூலம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
    பழனி:

    பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 28-ந்தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் 29 நாட்களுக்கு பிறகு மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

    கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, முதுநிலை கணக்கு அதிகாரி மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடந்தது.

    இதில் ரூ.1 கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150-ஐ பக்தர்கள் காணிக்கையாக உண்டியல்களில் செலுத்தியிருந்தனர். மேலும் தங்கம் 1 கிலோ (1,120 கிராம்), வெள்ளி 8¾ கிலோ (8,750 கிராம்), வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 681-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது.

    இது தவிர தங்கத்தால் ஆன வேல், சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளிப்பாதம், வெள்ளி வீடு, வெள்ளி காவடி, கிரீடம் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கடிகாரம், பட்டு வேஷ்டி போன்ற பல்வேறு பொருட்களும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

    ×