search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "handbag with jewelery stolen"

    • ஜஸ்டின் வினோதினி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
    • ஆசிரியையின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ். இவரது மனைவி ஜஸ்டின் வினோதினி (வயது 43). தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து ஜஸ்டின் வினோதினி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது கணவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தார். சம்பவத்தன்று இவர் இருதய சிகிச்சை பிரிவு அருகே கைப்பையுடன் அமர்ந்து இருந்தார்.

    அப்போது உடல் சோர்வு காரணமாக தூங்கினார். அங்கு வந்த யாரோ மர்மநபர் ஜஸ்டின் வினோதினி வைத்து இருந்த கைப்பையை திருடி தப்பிச் சென்றனர்.

    அந்த கைப்பையில் 1½ தங்க வளையல், ஓட்டுனர் உரிமம், ரேசன் கார்டு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தது. இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையுடம் ஆசிரியையின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள். 

    ×