என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Goverment Employees"
- தமிழக அரசு அலுவலர் ஒன்றியம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது.
- கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு அலுவலர் ஒன்றியம், நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சந்திப்பில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைத்தலைவர்கள் அருணாச்சலம், சண்முக சுந்தரம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. எனினும் அகவிலைப் படியை 1-7-2022 முன்தேதி யிட்டு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 28-ந் தேதி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் மாடசாமி, மீனாட்சி, குமார், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்