search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goats Sold In Ayyalur Market"

    வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வருகின்றனர். வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆடுகளை வாங்கிச் சென்று ஒருவாரம் வளர்த்து பண்டிகை நாளில் பலிகொடுத்து வழிபடுவார்கள். இதற்காக கரூர், அரவக்குறிச்சி, நத்தம், புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் அய்யலூர் சந்தைக்கு வந்திருந்தனர்.

    விவசாயிகளும் அதிகளவில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆட்டுக்கிடா ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்துகாணப்பட்ட போதும் ஆட்டுக்கிடாய்களை வாங்க போட்டிபோட்டனர். இதனால் விரைவாகவே ஆடுகள் விற்றுத்தீர்ந்தது. நாட்டுக்கோழி விலையும் அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.
    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இருந்தபோதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சந்தையில் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப் படுவதால் கொள்ளை பயமும் உள்ளது. எனவே அய்யலூர் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர்.

    ×