என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » girl dies
நீங்கள் தேடியது "girl dies"
பாலக்காடு அருகே தந்தையின் கையை உதறிவிட்டு தாயை பார்த்த மகிழ்ச்சியில் ரோட்டை கடந்த சிறுமி வாகனம் மோதி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் மயிலம்புரத்தை சேர்ந்தவர் சுமேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபத்ரா. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு அஸ்டஸ்ரீ (வயது3) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று மாலை மனைவியை அழைத்து வர சுமேஷ் ஆட்டோவில் மகள், மகனுடன் புறப்பட்டார். கம்பெனிக்கு எதிர்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து சுபத்ரா வேலை முடிந்து வந்தார். தாயை பார்த்த மகிழ்ச்சியில் சிறுமி அஸ்டஸ்ரீ தந்தையின் கையை உதறி விட்டு சாலையை கடந்து தாயை கட்டி அணைக்க ஓடினார். நடுரோட்டில் ஓடியபோது பாலக்காட்டில் இருந்து சொர்ணூருக்கு வந்த வேன் சிறுமி மீது மோதியது.
இதில் பெற்றோர் கண்முன்பு சிறுமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கண்ணியாம்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்டஸ்ரீ சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் மயிலம்புரத்தை சேர்ந்தவர் சுமேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபத்ரா. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு அஸ்டஸ்ரீ (வயது3) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று மாலை மனைவியை அழைத்து வர சுமேஷ் ஆட்டோவில் மகள், மகனுடன் புறப்பட்டார். கம்பெனிக்கு எதிர்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு காத்திருந்தனர்.
சிறிது நேரம் கழித்து சுபத்ரா வேலை முடிந்து வந்தார். தாயை பார்த்த மகிழ்ச்சியில் சிறுமி அஸ்டஸ்ரீ தந்தையின் கையை உதறி விட்டு சாலையை கடந்து தாயை கட்டி அணைக்க ஓடினார். நடுரோட்டில் ஓடியபோது பாலக்காட்டில் இருந்து சொர்ணூருக்கு வந்த வேன் சிறுமி மீது மோதியது.
இதில் பெற்றோர் கண்முன்பு சிறுமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு கண்ணியாம்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்டஸ்ரீ சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X