search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Girl Dead Body"

    • நம்பியாற்றில் இன்று காலை பெண் சடலம் மிதந்து வந்தது.
    • விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் துலுக்கர்பட்டியை சேர்ந்த ஈஸ்வரி என்பது தெரியவந்தது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரம் மயிலாப்பூர் நம்பியாற்றில் இன்று காலை பெண் சடலம் மிதந்து வந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் இதுபற்றி நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    காதல் திருமணம்

    இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் சடலமாக மீட்கப்பட்டவர் துலுக்கர்பட்டியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் சுடலைக்கண்ணு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    மாயம்

    இவர்களது காதல் திருமணத்திற்கு ஈஸ்வரி வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில் கணவர் வீட்டில் ஈஸ்வரி வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவன்-மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஈஸ்வரியை காணவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    கொன்று வீசப்பட்டாரா?

    இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அவரது கணவரே கொலை செய்து ஆற்றில் வீசினாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விசாரிக்க அவரை போலீசார் தேடிய போது சுடலைக்கண்ணுவை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. எனவே போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    ×