search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "former minister janardhan reddy"

    விசாரணைக்கு ஆஜராக வந்த ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகானை குற்றப் பிரிவு போலீசார் திடீரென கைது செய்தார்கள். #JanardhanReddy
    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி, நிதி நிறுவன அதிபரிடம், 57 கிலோ தங்க கட்டிகளை வாங்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஜனார்த்தனரெட்டியின் உதவியாளர் அலிகான் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், தங்க கட்டிகள் பெற்ற வழக்கில் ஜனார்த்தனரெட்டியிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதுபோல, விசாரணைக்கு ஆஜராகும்படி அலிகானுக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதையடுத்து, நேற்று மாலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது குற்றப் பிரிவு போலீசார் திடீரென அலிகானை கைது செய்தார்கள்.

    அலிகான் வீட்டில் கடந்த 7-ந் தேதி போலீசார் சோதனை நடத்தியபோது, அவர் வீட்டில் இருந்து 5 தோட்டாக்களை கைப்பற்றி இருந்தனர். சட்ட விரோதமாக தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்ததால் தற்போது அலிகான் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    தலைமறைவான கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்த ரெட்டி குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் இன்று ஆஜரானார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:
     
    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத் துறையில் வழக்கும் பதிவானது.



    இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டியின் உதவியை பரீத் நாடினார். அமலாக்கத்துறை வழக்கை சுமூகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு தலைமறைவானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாகிய அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

    இந்நிலையில், தலைமறைவாக கருதப்பட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்.

    அப்போது அவர் கூறுகையில், தன் மீது போடப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. போலீசாரிடம் எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார். #Karnataka #JanardhanaReddy
    ×