search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flag hoisting ceremony"

    • உளுந்தூர்பேட்டை பகுதியில் பா.ம.க. கொடி ஏற்று விழா நடைபெற்றது.
    • தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்க முழுவதும் பா.ம.க. 34-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது/ இதை முன்னிட்டு பாண்டூர் பஸ்நிலையத்தில் மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர். இதுபோல் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அந்த நிர்வாகிகளுடன் கலந்து கொடியேற்று விழா நடந்தது. இதில் முன்னாள் நிர்வாகிகள் பாண்டுர் பாண்டியன், மணிராஜ், ஜெயக்குமார், பாலாஜி, கோவிந்தராஜ், அறிவழகன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், கார்த்திக், தனபால் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை யும் செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் பகுதி மூத்த தமிழ்தேசியவாதியான கதிர்வேல் புலிக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி, தலைவர் ஈசுவரசாமி, பொருளாளர் ராமமூர்த்தி, இணை செயலாளர் நாகமாணிக்கம், துணை தலைவர் விஜயகுமார், மகளிர் பாசறை செயலாளர் ரீத்தாமேரி, மடத்துக்குளம் ஒன்றிய பொருப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் சிவநாதன், மடத்துக்குளம் பேரூராட்சி பொருப்பாளர்கள் பாலசுப்ரமணியம், வடிவேல் மற்றும் ரப்ரீக் ராசா, சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் சிலம்பரசன், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் சிவக்குமார் உட்பட 30க்கும்‌ மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மாத கலந்தாய்வு கிருஷ்ணாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    • திண்டிவனத்தில் பா.ம.க. கொடி ஏற்று விழாவில் நிர்வாகிகளிடம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

     திண்டிவனம் நகர பா.ம.க., சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள ஆரியாஸ் ஓட்டல் அருகில் கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பா.ம.க., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதால் கொடியேற்றிவிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு அன்புமணி ராமதாஸ், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை காணவில்லை. தொடர்ச்சியாக வழக்கறிஞர் பாலாஜி என்பவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500ம், நடுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க., நிர்வாகி பாலுவிடம் 3 பவுன் நகையை காணவில்லை. கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் நகை, பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×