search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் பா.ம.க. கொடி ஏற்று விழாவில் நிர்வாகிகளிடம் நகை பணம் கொள்ளை
    X

    திண்டிவனத்தில் பா.ம.க. கொடி ஏற்று விழாவில் நிர்வாகிகளிடம் நகை பணம் கொள்ளை

    • திண்டிவனத்தில் பா.ம.க. கொடி ஏற்று விழாவில் நிர்வாகிகளிடம் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் நகர பா.ம.க., சார்பில் பைபாஸ் சாலையில் உள்ள ஆரியாஸ் ஓட்டல் அருகில் கொடியேற்று விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் பா.ம.க., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதால் கொடியேற்றிவிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு அன்புமணி ராமதாஸ், அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். கூட்டத்தில் இருந்த மாவட்ட செயலாளர் ஜெயராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ. 17 ஆயிரத்தை காணவில்லை. தொடர்ச்சியாக வழக்கறிஞர் பாலாஜி என்பவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.6 ஆயிரத்து 500ம், நடுக்குப்பத்தை சேர்ந்த பா.ம.க., நிர்வாகி பாலுவிடம் 3 பவுன் நகையை காணவில்லை. கூட்டத்தில் புகுந்த மர்ம ஆசாமி, இந்த கைவரிசையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் நகை, பணம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×