search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FIFA World Cup 2022"

    • உலக கோப்பை கால்பந்து போட்டியில் நம்பர் ஒன் அணியான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை இ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

    தோஹா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா

    இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா

    எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

    • உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது.
    • லோகோவை உரிய அனுமதியின்றி வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கத்தார்:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி உலகக்கோப்பை லோகோவை கார் நம்பர் பிளேட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கத்தார் பொதுமக்களை எச்சர்க்கை விடுத்துள்ளது.

    இந்த லோகோவானது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிபா) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் சிறப்பு பதிப்புகள் ஏலம் விடப்பட்டு பதிவு செய்யப்பட்டவை என்று கத்தார் கூறுகிறது.

    பதிவு செய்யப்படாத வாகனங்களில் லோகோவை நகலெடுத்து அமைப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

    ×