search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fields"

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் மயானத்திற்கு பாதை இல்லாததால் பிணத்தை வயல்கள் வழியாக தூக்கி செல்லும் மக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் ஆப்பரக்குடி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதியன் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான மயானமானது ஆப்பரக்குடியில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வயல் வெளிகளுக்கு நடுவே உள்ளது .

    இந்த நிலையில் ஊரில் யாரேனும் உயிரிழந்தால் அப்பகுதி மக்கள் இறந்தவர்களை நினைத்து துயர படுகிறார்களோ இல்லையோ இந்த சடலத்தை மயானத்துக்கு தூக்கிச் செல்ல நாம் என்ன பாடுபட வேண்டும் என்ற கவலை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பயணத்துக்கான பாதை இல்லாமல் ஆப்பரக்குடி குடிமக்கள் பெருந்துன்பப்பட்டு வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் அவரது பிரேதத்தை வயல் வழியாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துச் செல்கின்றனர் அப்பொழுது பிரேதம் பலமுறை வயலில் விழுந்தும் அல்லது வயல்களுக்கு நடுவில் உள்ள வாய்க்காலில் விழுந்தும் பல சிரமங்களை தாண்டி தான் மயானத்துக்கு செல்ல வேண்டி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    நேற்று அப்பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை தூக்கி கொண்டு சென்ற இறுதி ஊர்வலமானது விவசாயிகளும் , விவசாய தொழிலாளர்களும் பாடுபட்டு வளர்த்த சம்பா பயிரின் நடுவே சென்றது. பிணத்தை தூக்கி சென்ற பலரும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் என்பதால் இறந்த அய்யனாருக்காக வருந்துவதா? அல்லது தாங்கள் வளர்த்த பயிர்கள் தங்கள் காலிலேயே மிதிபடு வதைக் கண்டு வருந்துவதா? என்று வேதனைப்பட்டு கொண்டே விளைநிலங்களில் இறங்கி மயானத்துக்கு சென்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர் . உடனடியாக மயானத்துக்கு செல்வதற்கு உரிய பாதை அமைத்து தர வேண்டும் என்பது உயிரோடு உள்ள எங்களின் கோரிக்கை மாத்திரமல்ல , இடுகாட்டை நோக்கிப் பயணிக்கும் பல ஆத்மாக்களின் கோரிக்கை என்கின்றனர், ஆப்பரக்குடி பொதுமக்கள்.

    சோழவந்தான் பகுதியில் நெற் பயிர்களை எலிகள் கொய்து தின்று நாசப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க எலிகளை கொல்வதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகிறது.

    சோழவந்தான்:

    சோழவந்தான் பகுதிகளுக்கு முல்லைபெரியாறு வைகையாற்று பாசனம் மூலம் 2 மாதங்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு நெல் நடவுபணி மும்மரமாக நடந்தது.

    தற்போது நெற்பயிர்கள் கதிர்களாக (பால்பிடித்தல்) மாறும் நிலையை வந்தடைந்தது. இந்த நிலையில் நெற் பயிர்களை எலிகள் கொய்து தின்று நாசப்படுத்தி வருகிறது.

    இதனை தடுக்க எலிகளை கொல்வதற்கு பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகிறது பாரம்பரிய முறையான எலிகிட்டிகள் 1¾ அடி இடைவெளியில் வயல் வெளிகளில் அமைத்து வருகின்றனர்.

    இதுகுறித்து எலிகிட்டி அமைக்கும் பணியை மேற்கொள்ளும் சின்னான் கூறுகையில், முதல் நாள் வைக்கப்பட்ட எலிகிட்டியை மறுநாள் சென்று எடுப்போம் கிட்டிகளில் எலி சிக்கி இறந்து கிடக்கும் அவைகளை நாங்களே அப்புறப்படுத்துவோம்.

    மற்ற முறைகளை காட்டிலும் இதற்காக ஆகும் செலவு குறைவு. மேலும் எலி கிட்டி அமைத்த வயலுக்கும் எலி கிட்டி அமைக்காத வயலுக்கும் அறுவடையின் போது மகசூல் வித்தியாசம் அதிகம் என்பதை விவசாயிகள் உணரமுடியும் என்றார்.

    மேலும் விவசாய பணிகளான உரமிடுதல்களை எடுத்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல எலி கிட்டிகள் அமைக்கும் பணியை அமைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை, வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

    திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
    ×