search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmar MLA"

    முன்னாள் எம்எல்ஏ ஒருவர் சிங்கை டாஸ்மாக் கடையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது.
    சிங்கை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அடையகருங்குளத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மாடசாமி என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலர் வந்து மாமூல் கேட்டதாக தெரிகிறது.

    அதற்கு மாடசாமி ஏற்கனவே மாமூல் வாங்கி சென்றுவிட்டனர் என கூறியுள்ளார். இதனால் அந்த கும்பல் விற்பனையாளர் மாடசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. இதுபற்றி சிங்கை போலீசுக்கு தகவல் கொடுக்கப்ப‌ட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள். இதனிடையே முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் அந்த கடையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இதுபற்றி போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×