search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "entrance fees"

    • ஒட்டன்சத்திரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் வாரந்தோறும் மாடு, கோழி, ஆடு போன்ற கால்நடை சந்தைகள் நடைபெறுகிறது.
    • கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிப்பதால் வியாபாரிகள் சந்தைக்கு வர மறுப்பதால் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு ச்சந்தை, செவ்வாய்கிழமை கோழிச்சந்தை, வியாழ க்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில்இருந்து விவ சாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடை களை வாங்க வருவார்கள்.

    கேரளாவை சேர்ந்த வியாபாரிகளும் வருகை தருவதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்து வருகிறது. குறிப்பாக இன்று நடந்த ஆட்டுச்சந்தையில் ஒரு சில வியாபாரிகள் மட்டுமே வந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது. காலை 5 மணிக்கு தொடங்கும் சந்தை 10 மணிவரை நடைெபறும். ஆனால் ஒரு மணிநேரத்திலேயே வந்திருந்த ஒரு சில வியாபாரிகளும் ஏமாற்ற த்துடன் திரும்பிச்சென்றனர்.

    இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், சந்தைக்கு கால்நடைகளை கொண்டுவர நுழைவுகட்ட ணமாக கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. நகராட்சி சார்பில் ரூ.10 கட்டணம் நிர்ணயித்து ள்ள நிலையில் ரூ.20 வசூலிக்கப்படு கிறது. மேலும் உள்ளே வருவத ற்கும், வெளியே கொண்டு செல்வதற்கும் 2 முறை கட்டணங்கள் வசூலிக்கின்றனர். ஆனால் பழனி அருகில் உள்ள கொங்குகன்னிவாடி சந்தையில் ரூ.10 கட்டணம் முறையாக வசூலிக்கப்படுகிறது.

    இதனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு சென்றுவிடுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் இங்குள்ள சந்தைக்கு வியா பாரிகள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை கொண்டு வருவதை முற்றிலும் தவிர்க்கும் நிலை உருவாகும். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என்றனர்.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் நாளை முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    சிங்கை:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் பார்கவ தேஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற துறையினர் தங்கள் வாகனத்தில் இருந்த படியே குடிநீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் கழிவு பொருட்களை ஆங்காங்கே வீசாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

    மேலும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருபவர்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பாக்கெட்டுகள் போன்ற நீர் மாசுபடும் வகையான பொருட்களை உபயோகிக்க கூடாது. தங்களது ஆடைகளை தண்ணீரில் விடக்கூடாது. புலிகள் காப்பக பகுதியை சுத்தப்படுத்தவும், சுத்தமாக வைத்திருக்கவும் மற்றும் அருவி மற்றும் நதியை சுத்தமாக வைப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

    எனவே நாளை (புதன் கிழமை) முதல் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது ஏற்கனவே வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் ரூ.30 தவிர சூழல் பாதுகாப்பு கட்டணம் ரூ.10 மற்றும் உபரி கட்டணம் ரூ.10 சேர்த்து மொத்தமாக 50 ரூபாயாக நபர் ஒன்றுக்கு வசூலிக்கப்படும்.

    மேலும் அகஸ்தியர் மலையின் பெருமைகளை கொண்ட பாரம்பரிய வனப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக நன்னீர் மீன்கள் அருங்காட்சியகம், இயற்கையின் அழகை ரசிக்க பார்வை கோபுரங்கள் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு அகஸ்தியர் மலையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் மணிமுத்தாறு மற்றும் சிவசைலம் அத்திரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடமும் சூழல் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    ×