search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity tariff reduction"

    • காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் .
    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர் .

    இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் சென்னையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் செயலாளர் பல்லடம் வேலுசாமி தலைமையில், கண்ணம்பாளையம் சங்க தலைவர் செல்வகுமார், மங்கலம் சங்க துணை தலைவர் கோபால், பல்லடம் சங்க பொருளாளர் முத்துகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து விசைத்தறி மின் கட்டண குறைப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி கூறியதாவது:- தமிழக அரசிடம் தற்போதுள்ள சூழ்நிலையில் நலிவடைந்துள்ள விசைத்தறி ஜவுளி தொழிலை காப்பாற்றும் வகையில்,மின் கட்டணத்தை அறவே ரத்து செய்யும்படி கோரிக்கை வைத்திருந்தோம்.

    இந்தநிலையில் சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து விசைத்தறிகளுக்கு மின் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து கோரிக்கை விடுத்தோம். இதுகுறித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இது குறித்து முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளதாகவும், அவரது அறிவுறுத்தலின்படி விரைவில், விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எங்களிடம் தெரிவித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
    • பொதுசுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் சாமிநாதன், வி்ஸ்வநாதன், ராமசாமி,ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.30 லட்சத்தில் லட்சுமி நகர் முதல் வாழைத்தோட்டம் வரையிலான பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை விழா மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், விசைத்தறி தொழில் இன்றைய நிலை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும்.நானும் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் தான் செய்து வருகிறேன். அதனால் தான் விசைத்தறியாளர்களை அழைத்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விசைத்தறி தொழிலில் உள்ள இன்றைய நிலை என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்தோம்.

    அதனை கேட்ட முதல்வர் ஸ்டாலின் விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் வகையில் விசைத்தறிகளுக்கு மின் கட்டண குறைப்பு செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.அந்த அறிவிப்பு விரைவில் வெளியியாகும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட நிர்வாகிகள் ராமசாமி, ஆறாக்குளம் சுப்பிரமணியம், பொதுசுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் சாமிநாதன், வி்ஸ்வநாதன், ராமசாமி,ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×