search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmdk member death"

    தேமுதிக பிரமுகர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33). தே.மு.தி.க. நகர செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி வளர்செல்வி (28).

    கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனவேதனை அடைந்த முருகன் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சி அடைந்த முருகனின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை பிருத்திவீமங்கலம் மணிமுக்தாறு பாலத்தின் அடியில் முருகன் பிணமாக கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து முருகனின் மனைவி வளர்செல்வி தியாகதுருகம் போலீசில் புகார் செய்தார். அதில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முருகன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×