search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindugal ganja arrest"

    திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி அருகே பல்வேறு கிராமங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் அபுதல்ஹா, மாரிமுத்து ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அஞ்சுகுழிப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த மனோகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதே போல் வத்தல தொப்பம்பட்டியில் கஞ்சா விற்ற காமராஜ் மற்றும் அவரது மனைவி முனீஸ்வரியை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×